இவ் ஏவுகணைகளிலொன்று இஸ்ரேலைக் தாக்கக்கூடிய 2000 கிலோமீற்றர் வீச்சைக் கொண்டதாகும்.

சஹாப் 3 ஏவுகணைப் பிரிவின் புதிய அத்தியாயம் என அழைக்கப்படும் இவ் ஏவுகணை பரிசோதனையை ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானின் இறைமையை பாதுகாக்க நாம் தயாரென தெரிவித்துள்ள இச் சோதனையை நடத்திய ஈரானிய புரட்சிகரப் காவல் படையின் விமானப் படைத் தளபதி, எமது ஏவுகணைகள் எந்த இலக்கையும் எந்த நேரத்திலும்

விரைவாகவும் சரியாகவும் தாக்குவதற்கு தயாராக உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிரிகளின் இலக்குகள் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் அவர்கள் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஈரான் தெளிவான எச்சரிக்கையொன்றை விடுத்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர வளைகுடாப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் உலக சந்தையில் எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகின்றது

ஈரானின் அணுவாயுத இலக்குகளை தாக்குவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான பதிலடியாகவே இது கருதப்படுகிறது.

ஈரான் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்த மறுத்ததையடுத்து ஈரானிய அதிகாரிகள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்தே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்