இவ் ஏவுகணைகளிலொன்று இஸ்ரேலைக் தாக்கக்கூடிய 2000 கிலோமீற்றர் வீச்சைக் கொண்டதாகும்.
சஹாப் 3 ஏவுகணைப் பிரிவின் புதிய அத்தியாயம் என அழைக்கப்படும் இவ் ஏவுகணை பரிசோதனையை ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் இறைமையை பாதுகாக்க நாம் தயாரென தெரிவித்துள்ள இச் சோதனையை நடத்திய ஈரானிய புரட்சிகரப் காவல் படையின் விமானப் படைத் தளபதி, எமது ஏவுகணைகள் எந்த இலக்கையும் எந்த நேரத்திலும்
விரைவாகவும் சரியாகவும் தாக்குவதற்கு தயாராக உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரிகளின் இலக்குகள் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் அவர்கள் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஈரான் தெளிவான எச்சரிக்கையொன்றை விடுத்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர வளைகுடாப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் உலக சந்தையில் எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகின்றது
ஈரானின் அணுவாயுத இலக்குகளை தாக்குவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான பதிலடியாகவே இது கருதப்படுகிறது.
ஈரான் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்த மறுத்ததையடுத்து ஈரானிய அதிகாரிகள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்தே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





