SmallMediumLarge NarrowWideFluid
உணவுப் பற்றாக்குறை: ஜூலை 18-ல் ஐ.நா. கூட்டம் அச்சிடு E-mail
வெள்ளி, 11 ஜூலை 2008 01:54

flag-un.jpgஉணவுப் பற்றாக்குறை குறித்து விவாதிக்க ஜூலை 18-ல் ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் கூடுகிறது.

 

"அண்மைக்காலமாக மூன்றாம் உலக நாடுகளில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பசியினால் வாடுகின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க இம்மாதம் 18-ம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது' என்று ஐ.நா. பொது சபைத் தலைவர் ஸ்ரஜான் கெரிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுப்படுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை, இது குறித்து உறுப்பு நாடுகள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது வருகிறது.

இந்த பட்டியலில் இடம் பெற இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட நாள்களாக போராடி வருகின்றன.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.