"அண்மைக்காலமாக மூன்றாம் உலக நாடுகளில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பசியினால் வாடுகின்றனர்.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க இம்மாதம் 18-ம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது' என்று ஐ.நா. பொது சபைத் தலைவர் ஸ்ரஜான் கெரிம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுப்படுத்துவது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை, இது குறித்து உறுப்பு நாடுகள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது வருகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற இந்தியா உள்ளிட்ட நாடுகள் நீண்ட நாள்களாக போராடி வருகின்றன.
மேலதிக செய்திகள்
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு



.jpg)


