குண்டுவெடிப்பு வழக்கில் ஹனீஃபுக்கு தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறியும், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீசார் வேண்டுமென்றே அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்ததாக, விசாரணைக் கமிஷன் முன் குயீன்ஸ்லாண்ட் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகாததால், விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியா திரும்பிய ஹனீஃப், தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் மீது வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கிடையே ஹனீஃப் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த ஜான் கிளார்க் விசாரணைக் கமிஷன், தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், ஹனீஃப் மீது போதிய ஆதாரம் இல்லை என்று குயீன்ஸ்லாண்ட் போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர்.
ஹனீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், போதிய ஆதாரம் இல்லை என்று நான்கு அல்லது ஐந்து முறை எடுத்துக்கூறியும் ஃபெடரல் போலீசார் அவர் மீது குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர்.
அவர் மீது வேண்டுமென்றே தீவிரவாதம் தொடர்புடைய புகாரை பதிவு செய்து, மூன்று வாரம் சிறையில் அடைத்தனர் என்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





