குண்டுவெடிப்பு வழக்கில் ஹனீஃபுக்கு தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறியும், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீசார் வேண்டுமென்றே அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்ததாக, விசாரணைக் கமிஷன் முன் குயீன்ஸ்லாண்ட் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகாததால், விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியா திரும்பிய ஹனீஃப், தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கிடையே ஹனீஃப் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த ஜான் கிளார்க் விசாரணைக் கமிஷன், தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், ஹனீஃப் மீது போதிய ஆதாரம் இல்லை என்று குயீன்ஸ்லாண்ட் போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர்.

ஹனீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், போதிய ஆதாரம் இல்லை என்று நான்கு அல்லது ஐந்து முறை எடுத்துக்கூறியும் ஃபெடரல் போலீசார் அவர் மீது குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர்.

அவர் மீது வேண்டுமென்றே தீவிரவாதம் தொடர்புடைய புகாரை பதிவு செய்து, மூன்று வாரம் சிறையில் அடைத்தனர் என்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்