SmallMediumLarge NarrowWideFluid
டாக்டர் ஹனீஃப் கைது விவகாரம்: ஆஸ்திரேலிய போலீசாருக்கு மீண்டும் சிக்கல் அச்சிடு E-mail
வெள்ளி, 11 ஜூலை 2008 02:07

aus_police.jpgலண்டனில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய டாக்டர் முகமது ஹனீஃபை கைது செய்த ஆஸ்திரேலிய போலீசாருக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

குண்டுவெடிப்பு வழக்கில் ஹனீஃபுக்கு தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறியும், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீசார் வேண்டுமென்றே அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்ததாக, விசாரணைக் கமிஷன் முன் குயீன்ஸ்லாண்ட் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகாததால், விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியா திரும்பிய ஹனீஃப், தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கிடையே ஹனீஃப் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த ஜான் கிளார்க் விசாரணைக் கமிஷன், தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், ஹனீஃப் மீது போதிய ஆதாரம் இல்லை என்று குயீன்ஸ்லாண்ட் போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர்.

ஹனீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், போதிய ஆதாரம் இல்லை என்று நான்கு அல்லது ஐந்து முறை எடுத்துக்கூறியும் ஃபெடரல் போலீசார் அவர் மீது குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர்.

அவர் மீது வேண்டுமென்றே தீவிரவாதம் தொடர்புடைய புகாரை பதிவு செய்து, மூன்று வாரம் சிறையில் அடைத்தனர் என்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.