SmallMediumLarge NarrowWideFluid
"இத்தாலியில் அடுத்த ஜி-8 மாநாடு: பருவநிலை மாற்றம் முக்கியத்துவம் பெறும்' அச்சிடு E-mail
சனி, 12 ஜூலை 2008 14:54

g8.jpgஇத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கான யோசனை மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவை முக்கியத்துவம் பெறும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த புதன்கிழமை முடிந்த ஜி-8 மாநாடு குறித்து கனடாவைச் சேர்ந்த "ஜி-8 மாநாட்டு ஆய்வுக் குழு' இத்தகவலை தெரிவித்துள்ளது.

இக்குழுவைச் சேர்ந்த ஜான் கிர்டன், ஜி-8 மாநாட்டு முடிவுகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். மாநாடு முடிந்த நிலையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

"செல்வந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்வதற்கு தயாராகிவிட்டன.

2050க்குள் ஓசோன் படலத்தை பாதிக்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தை 50 சதவீதமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரப்படுத்தும்' என்றார் அவர்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் ஜப்பான், ஜி-8 நாடுகளின் சிறந்த தலைவராக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.