SmallMediumLarge NarrowWideFluid
போராட்டத்தில் ஈடுபட்ட 42 திபேத்தியர்களுக்கு சிறை அச்சிடு E-mail
சனி, 12 ஜூலை 2008 15:45

dlailama.jpgசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 42 திபேத்தியர்களை சீன அரசு சிறையில் அடைத்தது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபேத்திய மக்கள் தங்களுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி திபத்திய தலைநகர் லாசாவில் திபேத்தியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது சீன போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் திடீர் என்று வன்முறையில் இறங்கினர்.

தீ வைப்பு, கொள்ளை, பொது அமைதிக்கு குந்தகம், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக திபேத்திய போராட்டக்காரர்கள் பலரை சீன ராணுவம் கைது செய்தது. இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவர்களில் 41 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 19 மற்றும் 20 தேதிககளில் 19 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது மேலும் 42 பேருக்கு சிறை தண்டனைகளை வழங்கி சீன ஞிதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் இன்னும் 16 பேருக்கு தண்டனை என்ன என்பது தெரியவில்லை.இந்த 16 பேரில் சிலருக்கு மரண தண்டனை கூட கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல்களை சீன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீன ராணுவம் கட்டுப்பாட்டுடன் தான் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் போராட்டக்காரர்கள்தான் அத்து மீறி வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் சீன கூறி வருகிறது.

திபேத்தியர்களின் இந்த வன்முறைக்கு திபேத் தலைவர் தலாய் லாமாவே காரணம் என்றும் சீன தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.