SmallMediumLarge NarrowWideFluid
29 பிணைக்கைதிகளை கொல்வோம்: தலிபான்கள் மிரட்டல் அச்சிடு E-mail
ஞாயிறு, 13 ஜூலை 2008 07:24

afgan.jpgதங்களிடம் பிணைக்கைதியாக உள்ள 29 பாகிஸ்தான் வீரர்களை கொலை செய்து விடுவோம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில், வடமேற்கு முன்னணி பிராந்தியத்தில் பணியாற்றிய போலீஸôர் மற்றும் ராணுவ வீரர்கள் 29 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடந்த வியாழக்கிழமை சிறைப் பிடித்தனர்.

அவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தலிபான் செய்தித் தொடர்பாளர் மௌலி ஓமர், அரசுக்கு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

"பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில் தங்களிடம் பிணைக்கைதியாக உள்ள 29 பேரையும் கொலை செய்து விடுவோம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு இல்லாத பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.