எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தியாவுடனான இந்த உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் முடிவெடுக்கவுள்ள நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
 
இந்த உடன்பாட்டை பூரணப்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் சர்வதேச அணுசக்திக் கழகமும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவின் எந்தெந்த அணுஉலைகள் மின்னுற்பத்திக்கானவை, எவை அணு ஆயுத உற்பத்திக்கானவை, எவை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ள உலைகள் என்பது குறித்து இருதரப்பும் முடிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இந்த நிலையில் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் குழு முறையாகக் கூடி இந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் முன்னர், அவர்களிடம் இந்தியா இந்த ஒப்பந்தம் குறித்து விளக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளதுடன், மேலும் சில முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
 

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்