SmallMediumLarge NarrowWideFluid
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அணுசக்திக் கழகத்துக்கு இந்தியா விளக்கமளிக்கவுள்ளது அச்சிடு E-mail
புதன், 16 ஜூலை 2008 05:29

sivshangar.jpgஇந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்திக் கழகத்துடன் பாதுகாப்பு உடன்பாடுகள் செய்து கொள்வது குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியட்னாவுக்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தியாவுடனான இந்த உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் முடிவெடுக்கவுள்ள நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
 
இந்த உடன்பாட்டை பூரணப்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் சர்வதேச அணுசக்திக் கழகமும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவின் எந்தெந்த அணுஉலைகள் மின்னுற்பத்திக்கானவை, எவை அணு ஆயுத உற்பத்திக்கானவை, எவை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ள உலைகள் என்பது குறித்து இருதரப்பும் முடிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இந்த நிலையில் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் குழு முறையாகக் கூடி இந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் முன்னர், அவர்களிடம் இந்தியா இந்த ஒப்பந்தம் குறித்து விளக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளதுடன், மேலும் சில முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.