எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தியாவுடனான இந்த உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் முடிவெடுக்கவுள்ள நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த உடன்பாட்டை பூரணப்படுத்துவது தொடர்பாக இந்தியாவும் சர்வதேச அணுசக்திக் கழகமும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவின் எந்தெந்த அணுஉலைகள் மின்னுற்பத்திக்கானவை, எவை அணு ஆயுத உற்பத்திக்கானவை, எவை சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ள உலைகள் என்பது குறித்து இருதரப்பும் முடிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குனர்கள் குழு முறையாகக் கூடி இந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கும் முன்னர், அவர்களிடம் இந்தியா இந்த ஒப்பந்தம் குறித்து விளக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளதுடன், மேலும் சில முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





