| நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதியாக ராம்பரன் யாதேவ்: மாவோயிஸ்ட் வேட்பாளர் தோல்வி |
|
|
| திங்கள், 21 ஜூலை 2008 11:49 |
|
நேபாளத்தில் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ராம்பரன் யாதேவ் வெற்றி பெற்றுள்ளதாகவும், மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம்ராஜா பிரசாத் சிங் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அந்த நாட்டு அரச தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மொத்தமாக அளிக்கப்பட்ட 590 வாக்குகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் ராம்பரன் யாதேவ் 308 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். இதேவேளை மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம்ராஜா பிரசாத் சிங் 282 வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற, நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறத்தேவையான 298 வாக்குகளைப் பெறாததையடுத்தே, இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்டது. நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் 36 (பி) 2 பிரிவின்படி மீளவும் இந்த தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.