பாலஸ்தீன அரசு செய்தி நிறுவனமான "வாஃபா' இத்தகவலை தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களை விரட்ட இஸ்ரேல் தற்போது எலிகளையும் ஆயுதமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக ஜெருசலேம் வரும் யூதர்கள் பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து பாலஸ்தீனர்கள் வசிக்கும் தெருக்களில் அவற்றை திறந்து விட்டுச் செல்கின்றனர்.
அவை அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுத்து அவர்களை வீட்டை விட்டும் நகரத்தை விட்டும் விரட்டுவதுதான் இஸ்ரேலிய அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஜெருசலேமில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இது குறித்து கூறும் போது, "எலிகளை அழிக்க விஷ மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற போதிலும் அவை கிடைப்பது இல்லை' என்றனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெருசலேம் நகராட்சி செய்தித் தொடர்பாளர், "இது ஒரு கட்டுக்கதை. நகருக்குள் எலிகளை விடுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை' என்று கூறியுள்ளார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





