SmallMediumLarge NarrowWideFluid
பாலஸ்தீனர்களை விரட்ட எலிகள்: இஸ்ரேல் நூதன முயற்சி அச்சிடு E-mail
செவ்வாய், 22 ஜூலை 2008 13:26

mouse.jpgஜெருசலேம் நகரில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களின் குடும்பங்களை அங்கிருந்து விரட்ட அப்பகுதிகளில் எலிகளை அதிக அளவில் கொண்டு வந்து விட்டுள்ளது இஸ்ரேல்.

 பாலஸ்தீன அரசு செய்தி நிறுவனமான "வாஃபா' இத்தகவலை தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களை விரட்ட இஸ்ரேல் தற்போது எலிகளையும் ஆயுதமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

கடந்த 2 மாதங்களாக ஜெருசலேம் வரும் யூதர்கள் பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து பாலஸ்தீனர்கள் வசிக்கும் தெருக்களில் அவற்றை திறந்து விட்டுச் செல்கின்றனர்.

அவை அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுத்து அவர்களை வீட்டை விட்டும் நகரத்தை விட்டும் விரட்டுவதுதான் இஸ்ரேலிய அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஜெருசலேமில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இது குறித்து கூறும் போது, "எலிகளை அழிக்க விஷ மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற போதிலும் அவை கிடைப்பது இல்லை' என்றனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெருசலேம் நகராட்சி செய்தித் தொடர்பாளர், "இது ஒரு கட்டுக்கதை. நகருக்குள் எலிகளை விடுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை' என்று கூறியுள்ளார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.