SmallMediumLarge NarrowWideFluid
தீவிரவாதத்துக்கு எதிரான நிதியை போர் விமானங்கள் மேம்பாட்டுக்கு செலவிட அமெரிக்கா திட்டம் அச்சிடு E-mail
வெள்ளி, 25 ஜூலை 2008 08:42

flag_usa.jpgதீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஒருபகுதியை எஃப்-16 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்கு செலவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

 இத்திட்டத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இரண்டு பக்க அறிவிப்பு கடிதத்தை அரசு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் உள்ள தலிபான் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையில் அமெரிக்கா உதவிவருகிறது.

இதில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்திட பாகிஸ்தான் வசம் தற்போதுள்ள எஃப்-16 ரக போர் விமானங்கள் திறனற்றவையாக உள்ளன. எனவே அவற்றின் மின்னணு மற்றும் ரேடார் திட்டங்களை நவீனப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

ஏற்கெனவே தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து சுமார் ரூ.966 கோடியை போர் விமானங்களை நவீனப்படுத்தவதற்காக திருப்பிவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.

ஆனால் பாகிஸ்தான் தனது எதிரியான இந்தியா மீது தாக்குதலைத் நடத்துவதற்கு நவீன எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.