இத்திட்டத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இரண்டு பக்க அறிவிப்பு கடிதத்தை அரசு அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் உள்ள தலிபான் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையில் அமெரிக்கா உதவிவருகிறது.
இதில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்திட பாகிஸ்தான் வசம் தற்போதுள்ள எஃப்-16 ரக போர் விமானங்கள் திறனற்றவையாக உள்ளன. எனவே அவற்றின் மின்னணு மற்றும் ரேடார் திட்டங்களை நவீனப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
ஏற்கெனவே தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து சுமார் ரூ.966 கோடியை போர் விமானங்களை நவீனப்படுத்தவதற்காக திருப்பிவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.
ஆனால் பாகிஸ்தான் தனது எதிரியான இந்தியா மீது தாக்குதலைத் நடத்துவதற்கு நவீன எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





