| தீவிரவாதத்துக்கு எதிரான நிதியை போர் விமானங்கள் மேம்பாட்டுக்கு செலவிட அமெரிக்கா திட்டம் |
|
|
| வெள்ளி, 25 ஜூலை 2008 08:42 |
|
இத்திட்டத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இரண்டு பக்க அறிவிப்பு கடிதத்தை அரசு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் உள்ள தலிபான் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையில் அமெரிக்கா உதவிவருகிறது. இதில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்திட பாகிஸ்தான் வசம் தற்போதுள்ள எஃப்-16 ரக போர் விமானங்கள் திறனற்றவையாக உள்ளன. எனவே அவற்றின் மின்னணு மற்றும் ரேடார் திட்டங்களை நவீனப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. ஏற்கெனவே தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து சுமார் ரூ.966 கோடியை போர் விமானங்களை நவீனப்படுத்தவதற்காக திருப்பிவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. ஆனால் பாகிஸ்தான் தனது எதிரியான இந்தியா மீது தாக்குதலைத் நடத்துவதற்கு நவீன எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் ஒருபகுதியை எஃப்-16 ரக போர் விமானங்களை மேம்படுத்துவதற்கு செலவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.