| பிரதமர் யூசுப் ரஸா கிலானி வொஷிங்டனுக்கு விஜயம் |
|
|
| சனி, 26 ஜூலை 2008 12:10 |
|
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கு உறுதிபூண்டிருக்கும் அவர், அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை சந்திக்கவுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளும் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக யூசுப் ரஸா கிலானியின் வொஷிங்டனுக்கான விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக நிருபர்களுக்கு தெரிவித்துள்ள கிலானி, மார்ச் மாதத்தில் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இதுவே அமெரிக்காவுக்கான முதல் பயணம் எனவும் கூறினார். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் மீது இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிரான நடவக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கிலானி மற்றும் புஷ் கலந்துரையாடவுள்ளனர். கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆளுங்கூட்டணியின் கூட்டத்தின் போது பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை அனுமதிப்பதில்லையென்பதுடன் வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்தம், தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலுக்கு வழி வகுக்குமெனவும், எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதியளிக்கக் கூடாதெனவும் கூறி சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்திற்கு பாகிஸ்தான் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்தக் கடிததத்தில்; இந்த ஒப்பந்தம் இந்தியாவை அணுவாயுத சக்தியாக அங்கீகரிக்க வழி செய்கிறதெனவும், மேலும் பல அணுவாயுத சோதனைகளை இந்தியா நடத்துவதற்கும் வழி வகுக்கும் வகையிலுள்ளதெனவும் அந்தக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலும், அணு ஆயுதப் போட்டியும் உருவாகுமென்பதுடன் இப்பிராந்தியத்தில் அமைதி கெடுமெனவும் அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.