| புயல் வீசி 3 மாதங்கள் ஆனபிறகும் நிவாரணம் கிடைக்காமல் மியான்மர் மக்கள் அவதி |
|
|
| ஞாயிறு, 27 ஜூலை 2008 13:59 |
|
மியான்மரில் செயல்படும் ஐ.நா. உலக உணவு திட்டத்தின் இயக்குநர் கிரிஸ் கேய் இதைத் தெரிவித்தார். மியான்மரில் நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நிவாரண உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு உணவு தேவைப்படுகிறது. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், இந்தப் புயலின்போது உணவுக் கையிருப்பை இழந்து விட்டனர். மியான்மர் அரசும், ஐ.நா. அமைப்பும் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது. கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. ஆய்வு மேற்கொண்டபோது, 34 சதவீத மக்களுக்கு சாப்பிட உணவில்லை என்று தெரியவந்தது. உணவுக்காகவே அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக 89 சதவீதம் பேர் தெரிவித்தனர். அந்நாட்டில் 9,24,000 பேருக்கு ஐ.நா. உணவுத் திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட எரவாடி பகுதியில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. அந்நாட்டில் 7 லட்சம் சிறுவர்களுக்கு பல்வேறு விதமான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. அந்த சிறுவர்கள் வீடுகளை இழந்து வாடுகின்றனர். அவர்கள் படித்த பள்ளிக்கூடம் இடிந்துவிட்டது. மருத்துவமனைகள் அழிந்துவிட்டன. சேதமான பள்ளிகளை ஐ.நா. அமைப்பான யுனிசெப், சீரமைத்து வருகிறது. 6000 சிறுவர்கள் படிக்க வசதியாக சில பள்ளிகள் யுனிசெப் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








மியான்மர் நாட்டில் மே மாதம் வீசிய கடும் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் சரியான நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.