மியான்மரில் செயல்படும் ஐ.நா. உலக உணவு திட்டத்தின் இயக்குநர் கிரிஸ் கேய் இதைத் தெரிவித்தார். மியான்மரில் நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நிவாரண உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு உணவு தேவைப்படுகிறது.
மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், இந்தப் புயலின்போது உணவுக் கையிருப்பை இழந்து விட்டனர். மியான்மர் அரசும், ஐ.நா. அமைப்பும் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது.
கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. ஆய்வு மேற்கொண்டபோது, 34 சதவீத மக்களுக்கு சாப்பிட உணவில்லை என்று தெரியவந்தது. உணவுக்காகவே அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக 89 சதவீதம் பேர் தெரிவித்தனர்.
அந்நாட்டில் 9,24,000 பேருக்கு ஐ.நா. உணவுத் திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட எரவாடி பகுதியில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
அந்நாட்டில் 7 லட்சம் சிறுவர்களுக்கு பல்வேறு விதமான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. அந்த சிறுவர்கள் வீடுகளை இழந்து வாடுகின்றனர். அவர்கள் படித்த பள்ளிக்கூடம் இடிந்துவிட்டது. மருத்துவமனைகள் அழிந்துவிட்டன.
சேதமான பள்ளிகளை ஐ.நா. அமைப்பான யுனிசெப், சீரமைத்து வருகிறது. 6000 சிறுவர்கள் படிக்க வசதியாக சில பள்ளிகள் யுனிசெப் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





