மாவட்ட தலைமையகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ளது கோஸ்ட் மாநிலம். இந்த மாநிலத்தில் உள்ள ஸ்பெரா மாவட்ட தலைமையகத்தை தலீபான் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தாக்கினார்கள். இதில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். இதில் கட்டிடமும் சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நேட்டோ ராணுவத்தின் உதவியை கோரியது. அமெரிக்க ராணுவ கூட்டுறவில் உள்ள நாடுகளின் ராணுவம் தான் நேட்டோ ஆகும்.
70 தீவிரவாதிகள் பலி
இந்த நேட்டோ ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 70-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.
இந்த தகவலை மாநில கவர்னர் அர்சலா ஜமால் தெரிவித்தார்.
ஆனால் இந்த தகவலை தலீபான் தீவிரவாதிகள் மறுத்து உள்ளனர். எங்கள் தரப்பில் யாரும் பலியாகவில்லை. நாங்கள் நடத்திய தாக்குதலில் தான் 8 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர் என்று அவர்கள் கூறினர்.
வீடியோ ஆதாரம்
தலீபான் தரப்பில் யாரும் பலியாகவில்லை என்று தீவிரவாதிகள் கூறி இருப்பதற்கு கவர்னர் மறுத்து இருக்கிறார்.
ஸ்பெரா மாவட்டத்தில் நடந்த வான் தாக்குதலில் 50 முதல் 70 தீவிரவாதிகள் பலியானதற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதை நான் அதிகாரப்பூர்வமாகத்தான் கூறுகிறேன் என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வான் தாக்குதல் தொடங்கியதும் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்து ஓடி, கிராமங்களுக்குள் புகுந்தனர். கிராமங்களில் அப்பாவிகள் பலியாவதை தடுப்பதற்காக வான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


