மாவட்ட தலைமையகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ளது கோஸ்ட் மாநிலம். இந்த மாநிலத்தில் உள்ள ஸ்பெரா மாவட்ட தலைமையகத்தை தலீபான் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தாக்கினார்கள். இதில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். இதில் கட்டிடமும் சேதம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நேட்டோ ராணுவத்தின் உதவியை கோரியது. அமெரிக்க ராணுவ கூட்டுறவில் உள்ள நாடுகளின் ராணுவம் தான் நேட்டோ ஆகும்.
70 தீவிரவாதிகள் பலி
இந்த நேட்டோ ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 70-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.
இந்த தகவலை மாநில கவர்னர் அர்சலா ஜமால் தெரிவித்தார்.
ஆனால் இந்த தகவலை தலீபான் தீவிரவாதிகள் மறுத்து உள்ளனர். எங்கள் தரப்பில் யாரும் பலியாகவில்லை. நாங்கள் நடத்திய தாக்குதலில் தான் 8 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர் என்று அவர்கள் கூறினர்.
வீடியோ ஆதாரம்
தலீபான் தரப்பில் யாரும் பலியாகவில்லை என்று தீவிரவாதிகள் கூறி இருப்பதற்கு கவர்னர் மறுத்து இருக்கிறார்.
ஸ்பெரா மாவட்டத்தில் நடந்த வான் தாக்குதலில் 50 முதல் 70 தீவிரவாதிகள் பலியானதற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதை நான் அதிகாரப்பூர்வமாகத்தான் கூறுகிறேன் என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வான் தாக்குதல் தொடங்கியதும் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்து ஓடி, கிராமங்களுக்குள் புகுந்தனர். கிராமங்களில் அப்பாவிகள் பலியாவதை தடுப்பதற்காக வான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





