SmallMediumLarge NarrowWideFluid
பாக்தாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 26 பேர் பலி அச்சிடு E-mail
திங்கள், 28 ஜூலை 2008 08:16

இராக் தலைநகர் பாக்தாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மத ஊர்வலத்தில் 3 மனித வெடிகுண்டுகள் வெடித்து 26 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர்.

பாக்தாத் நகரின் வட பகுதியில் உள்ள ஷித்தி முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்றபோது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது.

இந்தச் சம்பவத்தில் மனித வெடிகுண்டுகளாக பெண்கள் பயன்படுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்புப் படையினரிடம் சிக்காமல் முஸ்லிம் பெண்கள் தங்களது ஆடைகளுக்குள் எளிதாக குண்டுகளை மறைத்துக் கொண்டு வர முடிவதால் பயங்கரவாத அமைப்புகள் தற்போது மனித வெடிகுண்டுகளாக பெண்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

பெண்கள் யாத்ரீகர்களை சோதனை செய்வதற்காக பாதுகாப்பு படையினர் பெண்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.