| விசாப்பெற ஆங்கிலமொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்டது பிரிட்டன் |
|
|
| புதன், 30 ஜூலை 2008 06:54 |
தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது.
அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகைதந்த பின் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டுக்கு செல்லும் பிரிட்டிஷ் பிரஜை பிரிட்டனை விட்டு செல்வதற்கு முன்னர் அதனை அறிவிக்க வேண்டும் என்று புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் இது அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. வலுக்கட்டாயமான திருமணங்களை தடுக்க இப்புதிய சட்ட விதிகள் உதவுமென பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 18 21 வயதிற்கு இடைப்பட்ட பராயத்தவரே இந்தப் பலவந்த திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். பலவந்தத் திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் உடல், உளரீதியாக பலகாலம் துன்பப்பட வழிவகுப்பதாகவும் இதற்கு சமூகத்தில் இடமளிக்கப்படாதெனவும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குவி ஸ்மித் கூறியுள்ளார். இதனடிப்படையிலேயே விசாவுக்கான வயதெல்லையை அதிகரித்தல், திருமணத்திற்காக வருகைதருவோரின் விண்ணப்பங்களை கடுமையாக பரிசோதித்தல், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வலியுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.