SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தானில் ராணுவத்தாக்குதலில் 94 தீவிரவாதிகள் பலி அச்சிடு E-mail
புதன், 06 ஆகஸ்ட் 2008 11:14

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக 5 நாட்கள் நடந்த ராணுவ தாக்குதலில் 94 பேர் பலியானார்கள். அவர்களுடன் நடந்த சண்டையில் 14 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு அழகும், அமைதியும் நிறைந்த பிரதேசம் இது. இந்த பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தஞ்சம்புகுந்ததும், அங்கு இருந்த அமைதி கெட்டது.

தீவிரவாதிகள் சோதனைச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்துவது, ராணுவவீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது என ஈடுபட்டு அமைதியை குலைத்தனர். இதனால் அவர்களை வேட்டையாடுவதற்காக ராணுவம் அந்த பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

தீவிரவாதிகள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகம் இருந்தது. இதனால் தீவிரவாதிகள் ராணுவத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில் தான் தீவிரவாதிகள் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பதை தடுப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை தாக்கி அழித்தனர். ஒரு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் தீவிரவாதிகள் நடவடிக்கையில் 137 பள்ளிக்கூடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ராணுவத்தினரின் மீது தாக்குதல் நடத்தினார்.

94 பேர் பலி

இதனால் ராணுவம் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. கடந்த 5 நாட்களாக ராணுவ நடவடிக்கை இருந்தது. அப்போது தீவிரவாதிகள் ராணுவத்தினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள். கிட்டத்தட்ட 94 ராணுவ வீரர்கள் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடந்ததாக பிரிகேடியர் ஜியா போட்லா தெரிவித்தார். தீவிரவாதிகள் ஒரு சில பகுதிகளுக்குள் மட்டும் முடக்கப்பட்டு உள்ளனர்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.