ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது அதிகார துஷ்பிரயோகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக இவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை ஜனாதிபதி பதவியிலிருந்து கௌரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கடந்த வருடம் முஷராபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உதவுமென குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை பதவி நீக்கம் செய்வது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்பும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளை மறுநியமனம் செய்வது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் இவர்கள் விவாதித்துள்ளனர்.
இந்த சந்திப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள சர்தாரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





