ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது அதிகார துஷ்பிரயோகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக இவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை ஜனாதிபதி பதவியிலிருந்து கௌரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கடந்த வருடம் முஷராபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை  புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உதவுமென குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை பதவி நீக்கம் செய்வது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்பும் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளை மறுநியமனம் செய்வது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் இவர்கள் விவாதித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள சர்தாரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

 

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்