SmallMediumLarge NarrowWideFluid
மசகு எண்ணெயின் விலை 119 டொலர்களாக வீழ்ச்சி அச்சிடு E-mail
வியாழன், 07 ஆகஸ்ட் 2008 14:45
oil.jpgஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை ஆசிய சந்தையில் நேற்றுப் புதன்கிழமை 119 டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது

.
 
அதேவேளை, நியூயோர்க் சந்தையில் நேற்றைய தினம் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 118.68 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 11 ஆம் திகதி நியூயோர்க் சந்தையில் 147.27 டொலர்களாகக் காணப்பட்ட மசகு எண்ணெயின் விலை, தற்போது 20 வீதத்தினால் வீழ்ச்சியுற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்திருப்பதே, எண்ணெய் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதற்கான பிரதான காரணம் என அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கியின் நிபுணர் டேவிட் மூரே தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி உறுதியடைவதோடு, ஈரானுடனான முரண்பாடும் தீர்க்கப்படுமானால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையை 70 தொடக்கம் 80 டொலர்களாகக் குறைக்க முடியும் என ஒபெக் தலைவரும் அல்ஜீரிய சக்திவள அமைச்சருமான சகீப் கலீல் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.