| ஜோர்ஜியாவுக்குள் ரஸ்ய படைகள் – முழு அளவில் யுத்தம் வெடிக்கலாம் என எச்சரிக்கை |
|
|
| சனி, 09 ஆகஸ்ட் 2008 04:50 |
|
இதற்கு முன்னர் ரஷ்ய ஆதரவைப் பெற்ற தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரை தமது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஜோர்ஜிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தலைநகர் ஸ்கின்வலி மீது மேற்கொள்ளப்பட்ட ஜோர்ஜியர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதத் தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமைதிகாப்பு படைகளுடன் அந்தப் பிராந்தியத்திலிருந்த தமது இராணுவத்தினர் 10 பேர் இதன்போது கொல்லப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பதில் தாக்குதல்களுக்கான படைகளை அசட்டியாவுக்கு தாம் அனுப்பியுள்ளதாக மொஸ்கோவிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. மேலும் ரஷ்யாவின் 58 ஆவது படைப்பிரிவு தலைநகர் ஸ்கின்வலியை அண்மித்துவிட்டதாக மூத்த தளபதி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை தெற்கு அசட்டியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இவ்வாறு யுத்தம் இடம்பெறுமானால் அது மொத்தப் பிராந்தியத்துக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய பதற்றநிலை குறித்து மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளதாக நேட்டோ கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புமே விவேகத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மைக்கெல் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஜோர்ஜியாவில் அரச படைகளுக்கும் சுயாட்சி கோரி போராடும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தெற்கு அசட்டியாவின் தலைநகரான் ஸ்கின்வலிக்குள் ரஸ்ய துருப்புகள் நுழைந்துள்ளதால் அப்பகுதியில் முழு அளவிலான போர் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.