இதற்கு முன்னர் ரஷ்ய ஆதரவைப் பெற்ற தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரை தமது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஜோர்ஜிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் ஸ்கின்வலியில் இரவு வேளையில் குண்டுவீச்சுக்களுடன் ஜோர்ஜியாவின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியிருந்ததுடன் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பீரங்கிகள், தாங்கிகள் மற்றும் விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தலைநகர் ஸ்கின்வலி மீது மேற்கொள்ளப்பட்ட ஜோர்ஜியர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அமைதிகாப்பு படைகளுடன் அந்தப் பிராந்தியத்திலிருந்த தமது இராணுவத்தினர் 10 பேர் இதன்போது கொல்லப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பதில் தாக்குதல்களுக்கான படைகளை அசட்டியாவுக்கு தாம் அனுப்பியுள்ளதாக மொஸ்கோவிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
மேலும் ரஷ்யாவின் 58 ஆவது படைப்பிரிவு தலைநகர் ஸ்கின்வலியை அண்மித்துவிட்டதாக மூத்த தளபதி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை தெற்கு அசட்டியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
இவ்வாறு யுத்தம் இடம்பெறுமானால் அது மொத்தப் பிராந்தியத்துக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய பதற்றநிலை குறித்து மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளதாக நேட்டோ கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புமே விவேகத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மைக்கெல் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





