SmallMediumLarge NarrowWideFluid
முஷாரபின் பதவி விலகலை ஒபாமாவும், மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர் அச்சிடு E-mail
புதன், 20 ஆகஸ்ட் 2008 02:09

obama.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப், தனது பதவியிலிருந்து விலகியதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களான பராக் ஒபாமாவும், ஜோன் மெக்கெய்னும் வரவேற்றுள்ளனர்.

 சரியான நேரத்தில், மிகச் சரியான முடிவை பர்வேஷ் முஷாரப் எடுத்துள்ளாரென ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தானில் நிலவி வந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதெனவும் அவர் கூறினார்.

பர்வேஷ் முஷாரப் பதவி விலகியுள்ளதால் தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி தீவிரவாதம் மற்றும்  உணவுப் பற்றாக்குறை ஆகியனவற்றை ஒழிக்கவும் மக்களாட்சியை நிலைநாட்டவும் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் பர்வேஷ் முஷாரப் பதவி விலகியதன் மூலம் மக்களாட்சி வலுப்படுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஜோன் மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.