இதேவேளை ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவிற்கு பின்னால் அனைவரையும் அணி திரளுமாறு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்காக ஒபாமாவுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தான் பராக் ஒபாமாவின் பெருமைக்குரிய ஆதரவாளரெனவும் அவர் கூறியுள்ளார்.
பராக் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வகையில், இடம்பெற்ற அந்தக் கட்சியின் இராண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நீங்கள் எனக்காகவோ அல்லது பராக் ஒபாமாவிற்காகவோ வாக்களித்தவர்களாக இருக்கலாமெனக் குறிப்பிட்ட ஹிலாரி கிளின்டன், ஒரே கட்சிக்காக ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஜனநாயகக் கட்சியினர் தம்மிடையே பிளவு ஏற்பட்டு குடியரசுக் கட்சியினரிடம் தோல்வி காணக் கூடாதெனவும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


