| ஓபாமாவின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு; ஒபாமாவிற்கு பின்னால் அணிதிரளுமாறு ஹிலாரி அழைப்பு |
|
|
| வியாழன், 28 ஆகஸ்ட் 2008 10:24 |
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பராக் ஒபாமாவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவிற்கு பின்னால் அனைவரையும் அணி திரளுமாறு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்காக ஒபாமாவுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தான் பராக் ஒபாமாவின் பெருமைக்குரிய ஆதரவாளரெனவும் அவர் கூறியுள்ளார். பராக் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வகையில், இடம்பெற்ற அந்தக் கட்சியின் இராண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நீங்கள் எனக்காகவோ அல்லது பராக் ஒபாமாவிற்காகவோ வாக்களித்தவர்களாக இருக்கலாமெனக் குறிப்பிட்ட ஹிலாரி கிளின்டன், ஒரே கட்சிக்காக ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது எனவும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜனநாயகக் கட்சியினர் தம்மிடையே பிளவு ஏற்பட்டு குடியரசுக் கட்சியினரிடம் தோல்வி காணக் கூடாதெனவும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பராக் ஒபாமாவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.