SmallMediumLarge NarrowWideFluid
ஓபாமாவின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு; ஒபாமாவிற்கு பின்னால் அணிதிரளுமாறு ஹிலாரி அழைப்பு அச்சிடு E-mail
வியாழன், 28 ஆகஸ்ட் 2008 10:24
obama.jpgஅமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பராக் ஒபாமாவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடனும் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 இதேவேளை ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமாவிற்கு பின்னால் அனைவரையும் அணி திரளுமாறு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்காக ஒபாமாவுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன்  அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தான் பராக் ஒபாமாவின் பெருமைக்குரிய ஆதரவாளரெனவும் அவர் கூறியுள்ளார்.

பராக் ஒபாமாவை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வகையில், இடம்பெற்ற அந்தக் கட்சியின் இராண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நீங்கள் எனக்காகவோ அல்லது பராக் ஒபாமாவிற்காகவோ  வாக்களித்தவர்களாக இருக்கலாமெனக் குறிப்பிட்ட ஹிலாரி கிளின்டன், ஒரே கட்சிக்காக ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஜனநாயகக் கட்சியினர் தம்மிடையே பிளவு ஏற்பட்டு குடியரசுக் கட்சியினரிடம் தோல்வி காணக் கூடாதெனவும் ஹிலாரி கிளின்டன்  தெரிவித்துள்ளார்.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.