| பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு |
|
|
| ஞாயிறு, 28 செப்டெம்பர் 2008 09:42 |
|
இந்தியா வருமாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இருநாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது பாகிஸ்தான் வருமாறு மன்மோகன் சிங்குக்கு அதிபர் ஜர்தாரி அழைப்பு விடுத்தார். அதேபோல், இந்தியா வருமாறு ஜர்தாரியிடம், மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பாக அடுத்த மாதம் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இவைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி முதல் காஷ்மீர் எல்லை வழியாக வர்த்தக போக்குவரத்தை துவங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தகவல்களை இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் வியாழக்கிழமை தெரிவித்தார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.