SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு அச்சிடு E-mail
ஞாயிறு, 28 செப்டெம்பர் 2008 09:42

இந்தியா வருமாறு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இருநாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது பாகிஸ்தான் வருமாறு மன்மோகன் சிங்குக்கு அதிபர் ஜர்தாரி அழைப்பு விடுத்தார். அதேபோல், இந்தியா வருமாறு ஜர்தாரியிடம், மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பாக அடுத்த மாதம் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இவைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி முதல் காஷ்மீர் எல்லை வழியாக வர்த்தக போக்குவரத்தை துவங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தகவல்களை இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் வியாழக்கிழமை தெரிவித்தார்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.