SmallMediumLarge NarrowWideFluid
மசகு எண்ணெயின் விலை 82 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அச்சிடு E-mail
வெள்ளி, 10 ஒக்டோபர் 2008 14:07

 ஆசியாவில் ஒரு பரல் மசகுஎண்ணெயின் விலை 82 அமெரிக்க டொலராகக் குறைவடைந்துள்ளது.

உலகப் பொருளாதாரம் மேலும் சரிவுகளை எதிர்நோக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 
 
ஒருவருடத்துக்கு முன்னர் இருந்த விலைக்கு சமமான அளவு மசகுஎண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

88.78 அமெரிக்க டொராக விநியோகிக்கப்படும் மசகு எண்ணெயின் விலை திடீரென 6.07 அமெரிக்க டொலரால் வீழ்ச்சிகண்டுள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை குறைவாகக் காணப்பட்டபோதும் அதன் பின்னர் சடுதியாக அதிகரித்திருந்தது.

கடந்த ஜுலை மாதம் 147.27 அமெரிக்க டொலரை எட்டியிருந்த ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது 40 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை 93.02 அமெரிக்க டொலராக இருந்த மசகு எண்ணெய், ஈரானின் மேற்குப் பகுதி வான் எல்லைக்குள் தற்செயலாக நுழைந்த விமானமொன்றை ஈரான் வலுக்கட்டாயமாகக் கீழ் இறக்கியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து மசகு எண்ணெயின் விலை 5 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்தது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.