| கேள்விக்குறியாகும் அமெரிக்க விமான நிலையங்களின் பாதுகாப்பு |
|
|
| வியாழன், 16 ஒக்டோபர் 2008 13:28 |
|
செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அத்துடன் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ கேந்திரமான பென்டகனும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து அனைத்து அமெரிக்க விமானங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்தன. பயணிகள் காலணிகள் முதல் அனைத்தும் பரிசோதிக்கப்படுகின்றன. ஷேவிங் கிரீம், பற்பசை உள்ளிட்ட ஜெல் பொருள்கள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஜெல் பொருள்கள் பயணிகளின் பேக்கேஜில் மிகக் குறைந்த அளவே எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், பயணிகளை வழியனுப்ப வரும் பகுதிகள் வரை தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியுடன் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இது மற்ற பயணிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பயணிகள் அதிகம் செல்லும் 20 விமான நிலையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. பிலடெல்பியா, டெட்ராய்ட், ஃபோனிக்ஸ், மினியாபோலிஸ், செயின்ட் பால், டல்லாஸ் போர்ட் வொர்த், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய 7 விமான நிலையங்களில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பு குறைபாட்டின் வெளிப்பாடு என தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்விதம் அனுமதிப்பது பயணிகளுக்கும், விமான நிலைய ஊழியர்களுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கிகளை அனுமதிப்பதானது, வாய்ப்பு கிடைத்தால் அதை விமானத்திற்குள் எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்தித் தருவது போலாகிவிடும். விமான நிலையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், விமானங்களின் பயணம் பத்திரமானதாக இருக்காது என்று இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ரஃபி ரோன் தெரிவித்துள்ளார். தற்போது விமான நிலைய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் ரஃபி, விமான நிலைய பாதுகாப்பு மற்றும் விமான பயணத்தையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பாற்பட்ட பகுதிகள் அனைத்தும் பொதுவான பகுதிகளாகத்தான் கருதப்படுகிறது. எனவே அதுவரை துப்பாக்கிகள் எடுத்துவருவதை தடுக்க முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். பயணிகளை வழியனுப்ப வரும் பகுதி வரை, அது பொதுவான இடம்தான். ரயில்வே நிலையம் மற்றும் விற்பனை அங்காடி போன்றதுதான் என்று பிலடெல்பியா போலீஸôர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஃபெடரல் சட்டப்படி அனைத்து இடங்களுக்கும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. இருப்பினும் விமான நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்தான் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் பாதுகாப்பு நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜான் ஆலன் கூறினார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்தாலும் இன்னமும் சில விமான நிலையங்கள் முழு பாதுகாப்புடன் இல்லையோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.