மலேசிய மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் இந்து உரிமைக் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுஅமைதி பாதிக்கப்படுகிறது.
மலாய் மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படுவதாக சையது ஹமீத் அல்பர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்து உரிமைக் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தங்கள் அமைப்பை தடை செய்தது குறித்து இந்து உரிமைக் குழுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மலேசிய அரசு செயல்படுவதாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாணேந்திரன் தெரிவித்தார்.
தடை விதித்தாலும் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்று இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயலாளர் குணராஜ் ஜார்ஜ் கூறினார்.
இந்து உரிமைக் குழுத் தலைவர் வைத்தியமூர்த்தி தற்போது லண்டனில் உள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





