| மலேசியாவில் இந்து அமைப்புக்குத் தடை |
|
|
| வியாழன், 16 ஒக்டோபர் 2008 13:35 |
|
மலேசியாவில், இந்து உரிமைக் குழு அமைப்புக்கு அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அந்த அமைப்பு அச்சுறுத்தலாக விளங்குவதால், அதற்கு தடை விதிக்கப்படுவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சையது ஹமீத் அல்பர் அறிவித்துள்ளார். மலேசிய மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் இந்து உரிமைக் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுஅமைதி பாதிக்கப்படுகிறது. மலாய் மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படுவதாக சையது ஹமீத் அல்பர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்து உரிமைக் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தங்கள் அமைப்பை தடை செய்தது குறித்து இந்து உரிமைக் குழுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மலேசிய அரசு செயல்படுவதாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாணேந்திரன் தெரிவித்தார். தடை விதித்தாலும் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்று இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயலாளர் குணராஜ் ஜார்ஜ் கூறினார். இந்து உரிமைக் குழுத் தலைவர் வைத்தியமூர்த்தி தற்போது லண்டனில் உள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.